அனைத்துலக அன்னையர் நாளில் அன்னையின் பெருமை பகரும் பாடல்
நெஞ்சம் மறக்குமோ?
கருவாய்நான் உருவான போதே - என்னைக்
கருத்தாகக் காத்து வளர்த்த தாயே
இணையாக உனக்கென்றும் நீயே - நல்
ஏற்றமதை ஊற்றாய்த் தந்தாயே -- கருவாய்
உதிரத்தை உருக்கிப் பாலூட்டி வளர்த்தாய்
உறங்கிட வேஎனக்குத் தாலாட்டு இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்ளே புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்? -- கருவாய்
அம்மா எனும்சொல்லால் அதரத்தை அசைத்தாய்
அப்பா எனும்உறவை அறிமுகம் அளித்தாய்
அறிவினை ஊட்டும்முதல் ஆசானாய் அமைந்தாய்
அரசாளும் நிலைவரினும் அவர்க்கென்றும் நீயேதாய் -- கருவாய்
நன்னெறியில் பிள்ளைசெல்ல நாளும்நீயே உழைத்தாய்
நலங்கெட்டு நலிந்தபோதும் பிள்ளையென்றே அணைத்தாய்
நானிலத்தும் நலம்பெருக மனிதகுலம் படைத்தாய்
நாள்தோறும் வணங்கிடவே நயந்துநெஞ்சில் நிலைத்தாய் -- கருவாய்
-- பாவலர் பொன்.கருப்பையா
புதுக்கோட்டை
நெஞ்சம் மறக்குமோ?
கருவாய்நான் உருவான போதே - என்னைக்
கருத்தாகக் காத்து வளர்த்த தாயே
இணையாக உனக்கென்றும் நீயே - நல்
ஏற்றமதை ஊற்றாய்த் தந்தாயே -- கருவாய்
உதிரத்தை உருக்கிப் பாலூட்டி வளர்த்தாய்
உறங்கிட வேஎனக்குத் தாலாட்டு இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்ளே புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்? -- கருவாய்
அம்மா எனும்சொல்லால் அதரத்தை அசைத்தாய்
அப்பா எனும்உறவை அறிமுகம் அளித்தாய்
அறிவினை ஊட்டும்முதல் ஆசானாய் அமைந்தாய்
அரசாளும் நிலைவரினும் அவர்க்கென்றும் நீயேதாய் -- கருவாய்
நன்னெறியில் பிள்ளைசெல்ல நாளும்நீயே உழைத்தாய்
நலங்கெட்டு நலிந்தபோதும் பிள்ளையென்றே அணைத்தாய்
நானிலத்தும் நலம்பெருக மனிதகுலம் படைத்தாய்
நாள்தோறும் வணங்கிடவே நயந்துநெஞ்சில் நிலைத்தாய் -- கருவாய்
-- பாவலர் பொன்.கருப்பையா
புதுக்கோட்டை